ETV Bharat / state

வரதட்சணை கொடுமை- மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவர்

author img

By

Published : Aug 16, 2021, 1:00 PM IST

மதுரை: வாடிப்பட்டி அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டுக் கொதிக்கும் பாலை ஊற்றிய கணவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

வரதட்சணை கொடுமை
வரதட்சணை கொடுமை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் அருண் குமார். இவருக்கும், ஜெயபிரதாவுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 10 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

இவர் தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணையாக பணமும், தங்க நகைகளும் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

கணவன் - மனைவி இடையே வழக்கம்போல் இன்றும் (ஆக.16) தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த அருண் குமார் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்து மனைவி மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து படுகாயத்துடன் உயிருக்குப் போராடிய நிலையில் அலறிய ஜெயபிரதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மனைவி ஜெயபிரதா, கொடுத்த புகாரின் அடிப்படையில் அருண் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்தவரை கண்டுபிடித்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதட்சணை கேட்டு மனைவியின் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய இக்கொடுமை சம்பவம் வாடிப்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மனைவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கணவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.